மதகஜராஜா திரைப்படத்தின் வெற்றியை அடுத்து சுந்தர் சி யின் பிறந்த நாளை முன்னிட்டு பார்ட்டி ஒன்று நடத்தப்பட்டது. அந்த பார்ட்டியில் விஷால் குடித்துவிட்டு போதையில் செய்த ரகளை பற்றி பிரபல யூட்யூப் சேனல் ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் பேசிய விஷயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சினி துறையில் நள்ளிரவு பார்ட்டி நடப்பது சகஜமான விஷயமாக உள்ளது. அப்படி நடக்கின்ற பார்ட்டியின் மூலம் ஒரு நடிகர் மற்ற நடிகரை பற்றி தெரிந்து கொள்வதற்கும் நடிகைகளை பார்ப்பதற்கும் ஒரு நல்ல வாய்ப்பாகவும் சந்தர்ப்பமாகவும் அமைகிறது.
இதன் மூலம் பல நண்பர்களாக மாறிவிடக்கூடிய சூழ்நிலையை இது உருவாக்கிக் கொடுப்பதோடு சிலருக்கு காதல் போன்ற விஷயங்களும் கைகூட கூடிய வகையில் இந்த பார்ட்டிகள் அமைந்துவிடும்.
அப்படித்தான் சுந்தர் சி யின் மதக்கஜ ராஜா திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டு வெளிவராத நிலையில் இந்த படத்தை ஜெமினி பிக்சர்ஸ் சர்க்யூட் நிறுவனத்திடம் இருந்து 7 கோடி ரூபாய் கொடுத்து படத்தின் உரிமையை சுந்தர் சி பெற்று வெளியிட்டார்.
இந்த படம் நினைத்து பார்க்காத அளவு மிகப்பெரிய வெற்றியை தந்தது. அடுத்து அந்த அதிர்ஷ்ட மழையை கொண்டாட கூடிய வகையில் இரவு பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் பார்ட்டிக்கு கே எஸ் ரவிக்குமார், மீனா, வரலட்சுமி, விஷால், அஞ்சலி, குஷ்பூ போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
அப்போது விஷால் மீனாவின் தோள் மீது கை போட்டு குஷ்புவை கட்டிப்பிடித்தார் என்ற செய்திகள் வெளிவந்துள்ளது.
இது சினிமாவில் அந்த காலத்தில் இருந்து நடந்து வரும் விஷயம் தான் பார்டிக்குக்குச் செல்லும்போது அவர்களை கட்டிப்பிடித்து தான் வரவேற்பார்கள். இதில் தவறில்லை என்று மீடியாக்கள் விஷாலுக்கு வக்காலத்து வாங்கியது.
மேலும் இதில் எந்த வில்லங்கத்தனமும் இல்லை அதை தவறாக நினைப்பது தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டது. அந்த பார்ட்டி நடந்த சமயத்தில் விஷால் கடுமையான போதையில் இருந்தார் என சில ஊடகங்களில் செய்திகள் வெளி வந்திருந்தது.
இந்த கேள்விப்பட்ட பலரும் அப்போதுதான் காய்சலில் இருந்து குணமாகி வெளியே வந்திருக்கிறார். அப்படி இருக்க போதையில் எப்படி இருந்தால் என்று சொல்ல முடியும்.
எனவே குடிப்பதற்கு வாய்ப்பு இல்லாத போது மீடியாக்கள் அனைத்தும் அவர் குடித்து விட்டார் என்று பேசுவது தவறு.
அது மட்டுமல்லாமல் பார்ட்டில் தவறாக நடந்து கொண்டார் என்று சொல்லுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று பயில்வான் ரங்கநாதன் பேசியிருப்பது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Summary in English: Bayilvan Ranganathan, the multi-talented actor and journalist, recently shared his thoughts on the much-anticipated film “Vishal: Midnight Party.” Known for his engaging personality and insightful commentary, Bayilvan dives into what makes this film a must-watch. He highlights the unique blend of suspense and drama that keeps viewers on the edge of their seats.